நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » சாட்சியாய் இருப்பீர்கள்.

சாட்சியாய் இருப்பீர்கள்.

சுவாரஸ்யமான உண்மைச் சம்பவம்

பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாடு பிரதிகளை அழகாக அச்சிட்டு உலகத்தில் விநியோகித்து வரும் கிதியோன் சர்வதேச ஊழியங்களின்  ஒரு பேச்சாளர் சொன்ன ஒரு அருமையான சாட்சியை நான்  கேட்டேன்.


இந்த நிறுவனத்தார்  புதிய ஏற்பாட்டு வேதாகமங்களை இந்தியாவிலுள்ள பல பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக விநியோகித்து வருவது வழக்கம் அப்படியே இந்தியாவின் மும்பையில்  உள்ள ஒரு பாடசாலைக்கு அதை விநியோகிப்பதற்காக  அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தப் பாடசாலையின் அதிபர் ஒரு ஆர்எஸ்எஸ் காரராக இருந்த படியினால்  அந்த பாடசாலைக்குள் வேதாகமத்தின் ஒரு கதையாவது கொண்டு வரக்கூடாது என்று  பல வருடங்களாகமறுத்துவிட்டார். கிறிஸ்தவம் ஒரு வெளிநாட்டு மதம் கிறிஸ்து ஒரு வெளிநாட்டு கடவுள் ஆகவே அதை இந்த பாடசாலைக்குள் கடைசிவரை அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறி வந்தார்.


அந்தப் பாடசாலையின்  ஆசிரியர்களுக்கான சம்பளம் அண்ணாநகரில் உள்ள ஒரு வங்கிக்கு அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்படும் அந்தப் பாடசாலையிலிருந்து 2 ஆசிரியர்கள் அந்த வங்கிக்கு சென்று அந்த பணத்தை பாடசாலைக்கு எடுத்து வருவது வழக்கம்.  அப்படியே ஒரு முறை அந்த இரண்டு ஆசிரியர்களும் ஒரு ஆட்டோவை பிடித்து அதில் அந்த வங்கிக்கு சென்று ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு ஆட்டோவில் பாடசாலையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்கள் இருவருக்கும் நடுவில் அந்த பணப்பையை அவர்கள் வைத்திருந்தார்கள் ஆனால் பாடசாலை வந்ததும் ஆட்டோவிலிருந்து உறங்கும்போது மறந்துபோய் அதை எடுக்காமல் இறங்கிவிட்டார்கள் நேராக பாடசாலைக்குள் போய்  அதிபர் முன் நின்றார்கள் அதிபர் பணம் எங்கே என்று கேட்கவே இருவரும் ஒருவரை ஒருவர்  பார்த்து முழித்துக்கொண்டு நின்றார்கள். ஐந்து லட்சம் ரூபாய் அந்த பாடசாலையின் எல்லா ஆசிரியர்களுக்கான மொத்த சம்பளம் அதை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் அதிபர் கலங்கி நின்றார்.


 அப்போது ஒரு ஆட்டோ அவர்கள் நடுவில் வந்து நின்றது அதிலிருந்து அந்த ஆட்டோக்காரர் அந்த பையுடன் இறங்கி வந்தார் ஐயா இந்த ஆசிரியர்கள் இந்த பையை என்னுடைய ஆட்டோவுக்குள் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள் அதனால்தான் அதை எடுத்து வந்தேன் என்று அந்த பையை அவரிடம் கொடுத்தார்.

அதிபருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை அந்த ஆட்டோக்காரரை பார்த்து நன்றி செலுத்திவிட்டு இந்த பேக்கை திறந்து பார்த்தீர்களா இதற்குள் என்ன இருக்கின்றது தெரியுமா என்று கேட்டார் அதற்கு அந்த ஆட்டோக்காரர் ஆம் ஐயா திறந்து பார்த்தேன் அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருக்கின்றது அதனால் தான் அதைக் கொண்டு வந்தேன் என்றார் ஆச்சரியப்பட்ட அதிபர் எப்படி உன்னால் முடிந்தது இவ்வளவு பணத்தை கண்டும் நீ எப்படி ஆசைப்படாமல் இதை திருப்பிக் கொண்டுவந்து ஒப்படைக்கிறாய்?  என்று கேட்டார்


 அப்பொழுது அந்த ஆட்டோக்காரர் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சின்னஞ்சிறிய  புதிய ஏற்பாட்டு வேதாகம புத்தகத்தை எடுத்தார் எந்த வேதாகமத்தை தன்னுடைய பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னாரோ அதே வேதாகமம் தான் அது.  அந்த ஆட்டோக்காரர் அந்த வேத புத்தகத்தை காட்டி ஐயா  என்னுடைய மகன் ஒரு பாடசாலையில் ஏழாம் வகுப்பில் படிக்கிறான்  அவனுக்கு இந்த வேதாகமத்தை அவனுடைய பாடசாலையில் இலவசமாக கொடுத்தார்கள்.  என்னுடைய சட்டைப்பைக்குள் நான் இதை எப்பொழுதும் வைத்துக் கொள்வேன் எனக்கு ஆட்டோ சவாரி கிடைக்காத நேரங்களில் இதை எடுத்து நான் வாசிப்பது வழக்கம்  இதில் எபிரேயர் 13:5 இல் நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று ஒரு வசனம் சொல்லப்பட்டிருக்கிறது.  நான் இந்தப் பணத்தை ஆசைப்படாததற்கு காரணம் இந்தப் புத்தகமும் இதில் இருக்கிற இந்த வசனமும் தான் என்று சொன்னார். 


  அதிபருடைய இதயத்தை இந்த வார்த்தைகள் பிளந்தன.  அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டார்.  இவ்வளவு நல்ல போதனைகள் இருக்கிற இந்த புத்தகத்தை என்னுடைய பாடசாலைக்குள் தடை செய்தேன் என்று அவர் வெட்கித் தலை குனிந்தார். அந்த புத்தகத்தில் இருந்த கிதியோன் சர்வதேச ஊழிய நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்களுடைய பாடசாலையை உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள்  திறந்து தருகிறோம் இங்கே நீங்கள் உங்களுடைய இந்த மகத்தான புத்தகத்தை விநியோகிக்கலாம். எப்பொழுது வேண்டுமென்றாலும் நீங்கள் இங்கே வந்து உங்கள் சேவையை செய்யலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார்.


பிரியமானவர்களே இந்த ஒரு ஆட்டோ காரருடைய  சாட்சி வாழ்வு 3000 குடும்பங்களுக்கு சுவிசேஷத்தின் கதவைத் திறந்தது


இதைத்தான்  அப்போஸ்தலர் 1:8 இல் இயேசு சொன்னார் பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். உங்களுடைய சாட்சி வாழ்க்கை அனேகம் ஆயிரம் ஜனங்களுக்கு சுவிசேஷமாயிருக்கும்.  உங்கள் வாழ்க்கை எவ்விதம் இருக்கின்றது? இன்று நாம் சாட்சி சொல்லத்தான் பிரையாசப்படுகிறோமே தவிர சாட்சியாய் வாழ பிரயாசப்படுவதில்லை. வேதம் என்ன சொல்கிறதோ அதைப் பின்பற்றினால் போதும் அதன்படி வாழ்ந்தால் போதும் அதுவே மிகப்பெரிய சாட்சியின் ஜீவியமாக இருக்கும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்