நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

அன்பே என்னை மன்னிப்பாயா?

ஒய்யார வானம்,
வட்ட நிலா,
ஓடும் நதி,
ஓரமாய் ஒரு மொட்டைப்பனை,
உச்சியில் ஒரு ஒற்றைக் குருவி
மனதில் எழுகின்றன கற்பனைக் குவியல் 

நதியின் சலசல இரைச்சல் அதற்கு பிள்ளைகளின் அழுகுரலாய் கேட்கிறது.

நிலாவின் வெண்மை முகத்தில் மனைவியின் பாசத்தைக் காண்கிறது அந்தக் குருவி.

எங்கிருந்தோ வரும் தாமரை வாசனை மனைவியின் அணைப்பில் உண்டாகும் சுகந்தம் போல இருந்தது அந்தக் குருவிக்கு.

தனிமையை உணர உணர “ஜில்” என்ற குளிருடன் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. நிலாவின் ஒளியும் நெருப்பாய் கொதிக்கிறது.

குஞ்சுகளையும் மனைவியையும் பிரிந்த மூன்று நாட்கள் மூன்று யுகங்கள் போல இருந்தது அந்தக் குருவிக்கு.

இத்தனைக்கும் மனைவியின் அந்த ஒரேயொரு வார்த்தையே காரணம்.
இத்தனை வருடம் அவளை அன்பாக கவனித்தவன் நான். அவள் கண்களில் கண்ணீர் கசியாமல் காத்தவன் நான்.

என்னை சந்தேகப்பட்டு அவள் அந்த வார்த்தையை சொல்லியிருக்கவே கூடாது. என் அன்பை புரிந்து கொள்ளாத அவளோடு இனிமேல் வாழ்ந்தென்ன பிரயோஜனம்.

என்றெல்லாம் நினைத்து வீட்டை விட்டு வந்து விட்டது அக்குருவி
தனிமையின் கொடுமை ஒரு புறம் “மனைவி என்னை எங்கெல்லாம் தேடுகிறாளோ” “குஞ்சுகள் என்ன பாடுபடுகின்றனவோ” என்ற எண்ணங்களின் கொலைவெறி மறுபுறம்.

இரண்டையும் முறித்துக் கொண்டு வருகின்றது “இல்லை இல்லை என்னில் தவறில்லை அவள்தான் குற்றம் செய்தாள்” என்ற சுயகௌரவம்.

எண்ணங்களின் புயல் ஓய மீண்டும் அமைதி நிலைக்கு வருகிறது குருவியின் மனம்.

எங்கோ ஒரு மூங்கில் காட்டில். மூங்கில்களில் வண்டுகள் போட்ட துளைகளினூடே செல்லும் தென்றல் காற்றால் உண்டாகும் இதமான ஓசையினூடாக காதில் பேசிய இறைவனின் குரலைக் கேட்டது அக்குருவி.

திடீரென ஏதோ ஒரு முடிவை எடுத்ததாய் பறவை சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கியது. நேராக கூடு சென்றது.

கண்ணீர் மல்க பிள்ளைகளை அணைத்தபடி அழுது கொண்டிருந்த மனைவியை கட்டி அணைத்துக் கொண்டது.

ஏதோ பேச வாய் திறக்கும் முன்னே மனைவியின் வாய் முந்திக் கொண்டது. அன்பே என்னை மன்னித்துக்கொள்

தொடர்ந்தது குருவி.

நான் உன்னை மன்னிக்கிறேன். என்னையும் நீ மன்னித்துக் கொள்
அணைப்பு வரவர இறுக்கமாகிக் கொண்டே போனது.

இப்போது இரண்டு குருவிகளின் கண்களிலும் உண்டான கண்ணீருக்கு மகிழ்ச்சிதான் காரணமாக இருந்தது.

இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே மூங்கில்களில் வண்டுகளிட்ட துளைகளினூடே செல்லும் காற்றால் உண்டாகும் இதமான ஓசையூடாக இறைவன் அக்குருவியின் காதில் என்ன பேசியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.

உன் மனைவியை நீ ஏன் மன்னிக்ககூடது?

அன்பானவர்களே இயேசு உங்களைப் பார்த்து கேடகிறார். எனக்கு அநியாயம் செய்தவர்களை நான் மன்னித்தேனே. உனக்கு அநியாயம் செய்தவர்களை நீ ஏன் மன்னிக்க கூடது?

சிந்திப்பாயாக.       
-----------------------------------------------------by - robert dinesh-----------------------------------------------------    
Continue Reading | கருத்துகள்

நட்சத்திரங்களை எண்ண முடியுமா? - ( வேதாகம அறிவியல்-09 )

வானத்தின் நட்சத்திரங்களை எண்ணமுடியுமென்று எண்ணிய அக்கால விஞ்ஞானிகள் அவற்றை ஆளுக்கொரு எண்ணிக்கையாக கூறிவந்தார்கள்.

கி.பி. 1608 ஆம் ஆண்டுக்கு பின் சில ஆயிரம் நட்சத் திரங்களை தொலைநோக்கிகளின் வழியே விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள ஆரம்பித்தனா்

சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் 1930 வரை நம்பினர்.  பிறகு 40 Sextillion நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட்டனர் (40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.)

ஆனால் அதற்கு முன்னால் எழுதப்பட்ட வேத வார்த்தையானது நட்சத்திரங்களை எண்ண முடியாது என்றது.

எது உண்மை? இன்றைய அறிவியல் என்ன கூறுகிறது?

நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று விஞ்ஞானிகள் முடிவாக அறிவித்து விட்டனர்

வேத வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டாகி விட்டது. 

தொலை நோக்கி இல்லாமலேயே, நட்சத்திரங்களைப் பற்றி வேத எழுத்தாளர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? சிந்தியுங்கள்

ஆனால்“அவா் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவை களுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். . (சங் 147.4) என வாசிக்கிறோம் 

கடவுள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை யை அறிந்திருக்கிறதுமன்றி, அவைகளை பேரிட்டு அழைக்கிறார். மனித அறிவை பொறுத்த மட்டிலும், நம்மால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது. 

மிகப் பெரிய தூரதிருஷ்டி கண்ணாடிகளின் மூலமாகப் பார்த்தாலும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை முற்றிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
Continue Reading | கருத்துகள்

உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்

வேதாகமத்தில் 137ம் சங்கீதம் 9ம்  வசனத்தில் உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் எனும் வசனம் உள்ளது.
இந்த வசனத்தின் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் இவ்வசனத்தை மேற்கோள் காட்டி வேதாகமத்தை வசைபாடும் இஸ்லாமியர்களின் இம்சை தாங்க முடியவில்லை
Continue Reading | கருத்துகள் (7)

காற்றுக்கு நிறை உண்டா? -( வேதாகம அறிவியல்-08 )


 “காற்றுக்கு அதின் நிறையை நியமித்து ” யோபு 28.25


இந்த வசனம் “காற்றுக்கு எடையுண்டு” என்று கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வேதாகமத்தில் எழுதப்பட்டதாகும்.

ஒரு சதுர அங்குலத்திற்கு கடல் மட்டத்தில் 15 பவுண்டு எடை காற்றுக்கு உண்டு என்பது நமக்கு தெரியும்.

இதை டோர்ரிசில்லி என்பவா் கி.பி 1643-ல் செய்து காட்டினார். 

இது கண்டுபிடிப்பதற்கு எத்தைனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே வேதாகமத்தில் கூறப்பட்டு விட்டதல்லவா?
Continue Reading | கருத்துகள்

பூமியின் வயது எவ்வளவு? AGE OF THE EARTH- ( வேதாகம அறிவியல் -07 )

 பூமி உண்டாகி 450 கோடி ஆண்டுகட்கு மேல் ஆயிற்று என்று சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதைக் குறித்த கருத்துக்களை பார்ப்போம்.

தேவன் ஆதாமைப் படைத்த போது குழந்தையாகப் படைக்கவில்லை. அறிவும் சரீர வளர்ச்சியும் கொண்ட மனிதனாகப் படைத்தார்.
Continue Reading | கருத்துகள் (2)

உலகை சுமப்பது யார்? - ( வேதாகம அறிவியல்-06 )



அந்தரத்தில் தொங்கும் பூமி



அடலாஸ் என்னும் ஒருவர் எண்ணிலடங்கா பாரத்தைக்கொண்ட இந்த பூமியை சுமந்து கொண்டிருப்பதாக உலகிலேயே மிகச்சிறந்த ஞான வாதிகளாக கருத்ப்ப்ட்ட கிரேக்கர்கள் நம்பி வந்தனர். 

ஆரியர்களோ ஒரு பெரிய யானை  இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர். 

ஆனால் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட வேதாகமத்தின் யோபு நூலில் “பூமியை யாரும் சுமக்கவில்லை, பூமி அந்தரத்திலே தொங்க விடப்படி்டுள்ளது” என்ற மாபெரும் அறிவியல் உண்மை எழுதப்பட்டுள்ளது.

அவர் உத்திரமண்டலத்தை வெட்ட வெளியில் விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார். (யோபு 26.7)

வேதம் சொன்னபோது யாரும் நம்பவில்லை விஞ்ஞானம் கண்டு பிடித்து சொன்னபோது வேதத்தை நம்புகிறார்களள்.
Continue Reading | கருத்துகள்

உயிர் எங்கு இருக்கின்றது? - ( வேதாகம அறிவியல்-05 )

  “உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?” என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயின் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது என்பதை மோசே ஆதி.9:4, லேவி.17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார். ஆனால் உலகில் இருந்த அறிவியல் வல்லுநர்கள் யாவரும் “மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது” என்று கூறி வந்தனர்.



கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதுய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக மரணமடைந்த ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்குப் பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவா் யார்? இருதயத்தைக் கொடுத்தவரா, அல்லது இருதுயத்தைப் பெற்றுக்கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது. 

எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுப் போன பின்பும் மக்கள் நினைவின்றி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

உலகின் பல அறிவியல் வல்லுநர்கள் கூடி “உயிர் இரத்தத்தில் உள்ளது” என்ற கொள்கையை கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது. 

----------------------------------by-robert dinesh-------------------------------
Continue Reading | கருத்துகள்

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.