f
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
கிறிஸ்தவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்தவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சரியான நம்பிக்கை

😔🤜🤜🤜🤽🐢 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாமெல்லாரும் கிறிஸ்துவை நம்புகிறோம்.  அதனால்தான் எமக்கு விசுவாசிகள் என்று பெயர். ஆனால் இந்த உலகில் கிறிஸ்தவர்களாக வாழும் நாம் நம்முடைய நம்பிக்கை சரியானதுதானா என்று பரிசோதிக்க வேண்டியுள்ளது.  நாமெல்லாரும் கிறிஸ்துவை தான் விசுவாசிக்கிறோம். ஆனால் சரியான முறையில் அவரை விசுவாசிக்கிறோமா என்பதே கேள்வி.

 ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்தவனாக வரும்போதே அவனுக்குள் தவறான நம்பிக்கைகள் திணிக்கப்பட்டு விடுகின்றன. நீ கிறிஸ்தவன் ஆகிவிட்டால் உன்னுடைய வாழ்வில் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை, என்ற சிந்தனை  அந்த மனிதனுக்குள் திணிக்கப்பட்டு விடுவதால் அவன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே போராட்டங்கள் வரும்போது அவனுடைய நம்பிக்கையை குறித்து  சந்தேகப்பட ஆரம்பிக்கிறான்.

 வேதாகமத்தில் காணப்படும் பரிசுத்தவான்கள் அனைவரும்  கிறிஸ்துவை குறித்தும் இரட்சிப்பை குறித்தும் சரியான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள்.  சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் நம்பிக்கை சிறந்த உதாரணமாகும்.  இதை குறித்து நாம் தானியேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இவர்கள் ராஜாவை பார்த்து தங்கள் சரியான நம்பிக்கையை அறிக்கையிட்டார்கள். அதாவது “தேவன் எங்களை தப்புவிக்க வல்லவர். அவர் தப்புவித்தாலும் சரி, தப்புவிக்காவிட்டாலும் சரி நாங்கள் எங்கள் தேவனை மட்டுமே பணிந்து கொள்வோம்” என்பதே அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. 

கர்த்தர் எனக்கு நன்மை செய்தால் மட்டுமே அவரை நம்புவேன். என்பது தவறான நம்பிக்கை.  ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நம்மில் பலருடைய நம்பிக்கை தவறானதாகவே இருக்கின்றது. நம்மில் ஒருவருக்கு வியாதி ஏற்பட்டால் அல்லது ஒரு சிக்கலில் நாம் மாட்டிக் கொண்டால் நம்மை சுகமாக்கும் படி அல்லது விடுவிக்கும்படி தேவனை நோக்கி  கதறுகிறோம்.  கொஞ்சம் தாமதமாகும் பட்சத்தில் எங்களுடைய நம்பிக்கை கேள்விக்குறியாகிறது. உடனே சந்தேகப்பட ஆரம்பிக்கிறோம்.   இப்படியான பிரச்சினைகளால் தேவனை சந்தேகித்து பின்வாங்கி போனவர்களும் உண்டு.  

இரட்சிக்கப்பட்டு  விடுவதால் ஒருவருடைய வாழ்வில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று வேதத்தில் எங்கும் இல்லை.  இவ்வுலகத்தில் வாழும் வரையும் பல உபத்திரவங்கள், போராட்டங்கள் உண்டு.  தேவனுக்காக தங்களை முழுவதும் அர்ப்பணித்து வாழுகிற மக்கள் கூட பலவிதமான உபத்திரவங்களை அடைந்தார்கள். உதாரணமாக யோபு தன்னுடைய வாழ்வில் சந்தித்த கொடுமையான உபத்திரவங்கள் மத்தியிலும் அவர் தன்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை.  ஆபேல் தேவனுக்கு பிரியமான பலிகொடுத்தது நிமித்தம் கொலை செய்யப்பட்டார். யேசபேல் காலத்து தீர்க்கதரிசிகள் கொலை செய்யப்பட்டார்கள். தேவனுக்கு உண்மையான ஊழியம் செய்த பவுல் கூட துன்பங்களை அனுபவித்தார்.  இயேசு கிறிஸ்து “உலகத்தில் இனிமேல் உங்களுக்கு எந்த உபத்திரவங்களும் இல்லை” என்று சொல்லவில்லை மாறாக உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன். என்று சொன்னார் .

 நான் தேவனுக்கு பிரியமானவனாய் வாழ்வதனால் எந்த உபத்திரவமும் எனக்கு வராது என்று நம்புவது ஒரு சரியான நம்பிக்கை அல்ல. ஆனால் நான் கிறிஸ்தவனாக வாழ்வதனால் எனக்கு பல உபத்திரவங்கள் வரும் இருப்பினும் நான் அவைகளை மேற்கொண்டு ஜெயம் எடுப்பேன் என்பதுவே சரியான நம்பிக்கையாகும். எந்த பிரச்சினையும் வராதபடி என்னை கிறிஸ்து காப்பார; என்பதல்ல, அவர; என்னை காக்கா விட்டாலும் அவரே தெய்வம் என்று நம்புவதே கிறிஸ்துவில் நாம் வைக்க வேண்டிய சரியான நம்பிக்கையாகும்.

 இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை புதிதாக இரட்சிக்கப்பட்டு சபைக்கு வரும் விசுவாசிகளுக்குள் நாம் புகுத்தினால் எந்த போராட்டமான சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை விட்டு பின்வாங்கி போக மாட்டார்கள். 


Continue Reading | கருத்துகள்

இன்றைய ஆராதனையும் நாமும்

அன்று இயேசு சொன்னார் 'நீங்கள் அப்பம் கேட்டால் பிதா கல்லைக் கொடுக்க மாட்டார்' அனால் இன்று நாம் செய்கிறோம். தகப்பன் அப்பம் கேட்கிறார் நாம் கல்லைக் கொடுக்கிறோம். 

புரியும்படி சொல்கிறேன்: நமக்கெல்லாருக்கும் தகப்பன் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆராதனை வேறு. நாம் அவருக்கு கொடுக்கும் ஆராதனை வேறு. 

வாழ்வே ஆராதனையாகிறதா?

வாழ்க்கையையே ஆராதனையாக கேட்கும் அவருக்கு வாரத்தின் ஒரு நாளின் ஒரு மணி நேரத்தை மட்டுமே கொடுத்துவிட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறோம். 

உபாகமம்-18:5 சொல்கிறது எந்நாளும் தேவனை ஆராதிக்கும்படிக்கே தேவன் லேவி கோத்திரத்தை தெரிந்து கொண்டாராம். 

மற்றும் தானியேல்-06:16 இல் தரியு ராஜா தானியேலை பார்த்து 'நீ இடை விடாமல் ஆராதிக்கும் தேவன் உன்னைத் தப்புவிப்பார்' என்று கூறுகிறார். 

என்னது? இடைவிடாமல் ஆராதிப்பதா? வேறு வேலைகள் செய்வதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியல்ல. ஆராதனை என்பது சபையாக கூடி, பாடல்கள் பாடி, பற்பல பாஷைகளைப் பேசி, இசைக்கருவிகளால் ஒலியெழுப்புவது மட்டுமல்ல. நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்கள் மூலமும் தேவனை மகிமைப்படுத்துவதேயாகும். 

வேதத்தில் 1கொரி-10:31 சொல்கிறது 'நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்' ஆம் அதுதான் தேவன் விரும்பும் ஆராதனை. அவரை நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் மகிமைப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் சிறப்பான அராதனையாகும்.

அனால் இன்று நாம் என்ன செய்கிறோம்? திங்கட்கிழமை திருட்டுத்தனம், செவ்வாய்க்கிழமை செவித்தினவு(2தீமோ-4:3), புதன்கிழமை புழுகுத்தனம், வியாழக்கிழமை விக்கிரகாராதனை, வெள்ளிக்கிழமை வெகுளித்தனம், சனிக்கிழமை சகடைத்தனம். இவ்வாறு வாரநாள் முழுவதும் விளங்கிப்போகாத பல்வகைமைப் பாவங்களையும் கலந்து பருகிவிட்டு ஞாயிற்றுக் கிழமையானதும் பரிசுத்தக் குஞ்சுகள் போல பரிசுத்த தேவனை ஆராதிக்க பகட்டாக கூடி வருகிறோம். யாரை ஏமாற்றுகிறோம் தேவனையா? நம்மையேயல்லவா? தேவன் எதிர் பார்ப்பதில் கொஞ்சத்தைக் கூட நம்மால் கொடுக்க முடியாதுள்ளது.


தேவன் மகிமைப்படுகிறாரா?

ஆராதனையில் தேவன் மகிமைப்பட வேண்டும் என்பதே தேவனுடைய எதிர்பார்ப்பாகும். ஆனால் நாம் காணும் பல ஆராதனைகளில் புகை இருக்கிறது கூடவே பகையும் இருக்கிறது, சத்தம் இருக்கிறது தேவனுடைய சித்தம் இல்லை, பல வர்ண விளக்குகள் ஒளிர்கிறது ஆனால் தேவ வெளிச்சம் இல்லை. ஆராதனையாளன் எனப்படுபவன் இருக்கிறான் ஆனால் நிஜமான ஆராதனையாளன் இல்லை.

மொத்தத்தில் ஆராதனை நடத்துபவனுக்கும் பாடகனுக்குமே மகிமை போய்ச் சேருகிறது. தேவனுக்கு அதினால் எந்த மகிமையும் இல்லை. தேவன் பார்வையாளனாக காணப்படுகிறார். 

மனிதனின் மகிமைக்காகவும் புகழ்ச்சிக்காகவும் ஆராதனைகள் நடத்தப்பட்டு அழகான எடிட் பண்ணப்பட்ட புகைப்படங்களுடன் ஒளி இறுவட்டுகளாக ஆராதனைகள் வெளிவருகின்றன. அதை வீடுகளில் போட்டு பார்த்துவிட்டு ஆராதித்து மகிழ்ந்தது போன்ற திருப்தியில் நாம் மூழ்கி விடுகிறோம். இதைக்குறித்து வசனம் இவ்வாறு கூறுகிறது. சங்-4:2 மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். 

ஆராதனைகள் 'தேவனுக்கு மகிமையை கொடுக்கிறோம்' என்னும் பேரில் தான் நடக்கிறது. ஆனால் மகிமை போய்ச் சேருவதெல்லாம் நடத்துனருக்கே. தாங்கள் இயற்றும் பாடல்களையே தங்கள் ஆராதனைகளில் பாடுவார்கள். இதுக்கு என்ன காரணம். அவர்கள் இயற்றுவது மட்டும் தான் பாடலா? தெளிவாக  தெரிகிறதல்லவா? தங்களை பிரசித்தம் பண்ணவும் புகழ் தேடவும் அராதனை நடத்துவது வாடிக்கையாகி விட்டடது.


தேவன் எதிர்பார்க்கிற படி அமைகிறதா?

தேவன் ஆவியோடும் உண்மையோடும் நாம் அவரை ஆராதிப்பதை விரும்புகிறார் என்று யோவான்-4:23 கூறுகிறது. 

இன்று நாம் ஆவியோடு ஆராதிப்பதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல ஆவிகள் புகுந்து நம்முடைய ஆவியுடன் விளையாடிக்கொ ண்டிருக்கின்றன. நம்முடைய ஆவியை அலைய விட்டுவிட்டு வாயினால் ஆராதிக்கிறோம். இதைத்தான் தேவன் இவ்வாறு கூறுகிறார். ஏசா-29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்ளூ அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறதுளூ அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

சரி ஆவியோடு ஆராதிக்கவில்லை உண்மையோடாவது ஆராதிக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆண்டவர் பொய்களை துருத்தியில் சேர்த்து வைப்பதாக சொல்லியிருந்தால் இன்நேரம் நம்முடைய துருத்திகள் நிரம்பி வழிந்திருக்கும்.

ஆராதனைகளில் பாடும் பாடல்களில் பல பாடுபவர்களுக்கு உண்மையில்லை. 'உம்மையல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே என்று பாடுபவன் 'ஆண்டவரே என் மனவிருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று சொன்னீரே எனக்கு ஒரு அழகான வீடு கட்டித் தாருமையா' என்று ஜெபிக்கிறான். 'நீரே எல்லாம்' என்று பாடுபவன் வெளியே போனவுடன் 'கட்டினா அவள கட்டணும்டா' என்று அடம் பிடிக்கிறான். பாடும் போது, துதிக்கும் போது அது உண்மையா என்று ஆராய வேண்டும்.

இன்றைய ஆராதனைகள் பலவற்றில் ஆவியும் இல்லை உண்மையும் இல்லை. இதுதான் 'நாமும் நம்முடைய ஆராதனையும்' என்ற நோக்கில் பார்க்கும் போது புலப்படும் காரியம்.

  • முதலாவது நம்மடைய வாழ்வு ஆராதனையாகவுமில்லை
  • நாம் கூடி ஆராதிக்கும் போது அதில் தேவனுக்கு மகிமை கொடுப்பதும் இல்லை.
  • தேவன் விரும்பும் ஆராதனை செலுத்துவதுமில்லை.


இதற்கெல்லாம் விதிவிலக்காக உண்மையாய் ஆராதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

by- Roberrt Dinesh

Continue Reading | கருத்துகள்

சபையில் விசுவாசிகளுடன் பிணக்குகளின்றி வாழ வேதம் தரும் படிப்பினைகள்


சபை என்பது  பரிசுத்தர்கள் மட்டுமே கூடும் இடமல்ல. பாவிகளும், பரிசுத்தமாக வேண்டும் என்று விரும்புபவர்களும்கூடுமிடமாகும். பாவ நோய் பிடித்த நோயாளிகள் சுகமாகிக் கொள்ள விரும்பி வரும் வைத்தியசாலையே சபை. எனவே பலதரப்பட்ட மட்டங்களில் மனிதர்கள் சபைக்குள் கூடுவதால் சபைக்குள் பிணக்குகளும் அதை தீர்க்க போதகர்கள் அவஸ்தைப்படுவதும் வழமையானதாகி விட்டது.

இதற்கெல்லாம் காரணம் விசுவாசிகள் வேதத்துக்கு கீழ்ப்படிந்து வாழாததேயாகும். வேதம் சபை விசுவாசிகள் பிணக்குகளின்றி வாழ சில ஆலோசனைகளை கூறுகின்றது. இவற்றை அறிந்து அதன்படி நடந்தால் பிணக்குகளின்றி வாழலாம்.
அப்படிப்பட்ட 24 ஆலோசனைகளை வேதத்திலிருந்து எடுத்து இங்கே தருகிறேன்.
Continue Reading | கருத்துகள் (5)

ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?


இக்கட்டுரையில் ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கால கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதற்கான ஐந்து அடிப்படைக் காரணங்களை முதலில் தருகிறேன் அதன் பின்னர் ஓய்வுநாள் கட்டளை குறித்து கேட்கப்படும் நான்கு முக்கியமான கேள்விகளுக்கு வேதம் கூறும் பதிலையும் தருகிறேன் வாசித்து பயனடையுங்கள்.
Continue Reading | கருத்துகள் (1)

உபவாசம் - அன்றும் இன்றும்


  • பழைய ஏற்பாட்டு காலங்களில் உபவாசமிருந்து தங்களை  தாழ்த்தினார்கள், 
  • இக்காலங்களில் உபவாசமிருந்து தங்களை உயர்த்துகிறார்கள்,
I இராஜாக்கள் 21:27 ஆகாப் ... உபவாசம்பண்ணி,.. தாழ்மையாய் நடந்துகொண்டான்.
Continue Reading | கருத்துகள் (2)

கிறிஸ்தவன் பாவம் செய்தால் தண்டணை உண்டா?



01 “இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டு விட்டார்”. அப்படியிருக்க நான் செய்யும் பாவங்களுக்கு தண்டணை உண்டா?
 
“இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்படடு விட்டார். எனவே இனி நான் பாவம் செய்தாலும் மன்னிப்பு கேட்டு விட்டால் எனக்கு தண்டணை இல்லை” என்னும் கருத்து மிகவும் தவறாகும்.
Continue Reading | கருத்துகள் (1)

தேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..



ஜெபிப்பவன் மேல் ஆண்டவருக்கு பிரியம் தான் , ஆனால் சிலருடைய ஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன்தான் கூறினார் .

ஒருபோதும் பாவிகளின்  ஜெபத்தை அவர் அருவருப்பதில்லை. லூக்கா -18:10 இல் கூறப்படும் சம்பவத்தில் ஆயக்காரனும் பாவியுமாகிய ஒருவனின் ஜெபத்தை தேவன் அங்கீகரித்தது பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் எப்படிப்பட்ட கொடியவனாயிருந்தாலும், அவன்தேவனை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அவர் அவனுடைய ஜெபத்தை அங்கீகரிக்கிறார். ஆனால் ''நான்  இரட்சிக்கப்பட்டவன்'' என்று சொல்லும் சிலருடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?  
Continue Reading | கருத்துகள் (3)

ஓரினச் சேர்க்கை பாவமா? இது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? ஓரினச் சேர்க்கை பாவமா?

பதில்: ஓரினச்சேர்க்கைச் செயல் பாவம் என்ற ஒரே கருத்தையே வேதாகமம் கூறிவருகிறது. (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9).
கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் விளைவுதான் ஓரினச்சேர்க்கை என்று ரோமர் 1:26-27 குறிப்பிட்டு போதிக்கிறது. மனிதர்கள் தொடர்ந்து பாவத்திலும் அவிசுவாசத்திலும் இருக்கும்பொழுது,
Continue Reading | கருத்துகள்

கிறிஸ்தவர்கள் ஏன் விருத்தசேதனம் பண்ணுவதில்லை?

இஸ்லாமியர்கள் அடிக்கடி கிறிஸ்தவர்களை பார்த்து கேட்கும் கேள்விகளில் ஒன்றுதான் விருத்தசேதனத்தை பற்றியதாகும். அதாவது தேவன் பழைய ஏற்பாட்டில் விருத்த சேதனம் பண்ண வேண்டும் என்று கூறியிருக்க
கிறிஸ்தவர்கள் இன்று அதற்கு கீழ்ப்படிவதில்லை. பவுல் என்பவர் தேவனது விருத்த சேதன கட்டளையை நீக்கி விட்டார். இயேசுவே விருத்த சேதனம் செய்திருக்க கிறிஸ்தவர்கள் விருத்த சேதனம் செய்யாதிருக்க காரணம் என்ன? என்று கேட்கின்றனர். இப்படிப்பட்ட கேள்வி கேட்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றின் போது சகோதரன் காங்கேஸ்வரன் என்பவர் எழுதிய பதிலை இங்கே அனைவருக்கும் உதவியாக சமர்ப்பிக்கிறேன்.
Continue Reading | கருத்துகள் (2)

இறைவன் இருக்கின்றானா?... மனிதன் கேட்கிறான்


தேவன் இல்லையென்பது விஞ்ஞான உலகத்தின் உயிர் மூடிச்சு. கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை நிரூபிக்க அரசியல் விஞ்ஞானத் துறைகளில் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

உண்மையிலேயே கடவுள் இல்லையென்றால், இதை நிரூபிக்க இத்தனை பெரிய முயற்சிகள் தேவயில்லை. இல்லாத ஒன்றை இல்லை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க எடுக்கப்படும் முயற்சிகளே கடவுள் உண்டு என்பதற்கான ஆதாரங்களில் முக்கியமானதாகும்.
Continue Reading | கருத்துகள்

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -02


கடந்த பதிவின் தொடர்ச்சி.... 
இதன் முதல்பகுதியை வாசிக்க இங்கே கிளிக் செய்கபகுதி-1


ஏழு வித ஞானஸ்நானங்கள்
 உலகத்தில் ஏழுவித ஞானஸ்நானங்கள் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் எது வேதத்தின் முறைப்படியுள்ளது என்று கவனிப்போம்.
Continue Reading | கருத்துகள்

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01

ஞனஸ்நானத்தின் முக்கியத்துவம்
  1.   ஞானஸ்நானம் என்றால் என்ன?
  2.   அந்த ஞானஸ்நானம் யார் எடுக்க வேண்டும்?
  3.   அதை எப்படி எடுக்க வேண்டும்?
  4.   அப்படி வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து எடுப்பதினால் பலன் என்ன?
மேற்கூறிய இக்கேள்விகளுக்கு சத்திய வேதம் தெளிவாய் எவ்வளவேனும் சந்தேகத்திற்கு இடமின்றி எவரும் அறிந்து உணர்ந்து கீழ்ப்படிவதற்கு ஏதுவாக நமக்குப் போதிக்கிறது,
Continue Reading | கருத்துகள் (14)

கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?



குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா.... ஸாண்ட்ட கிளாஸ்!



சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.
Continue Reading | கருத்துகள்

இளைஞர்களே சிந்தியுங்கள்


இளைஞர்களே! விழித்தெழுங்கள்.. எதிர்காலம் நம்முடையதே..........

சந்தோஷமும், கேளிக்கையும உல்லாசமும் இளைஞர்களுக்கு அவசியமானதே. அதேபோல வாழ்வுக்கு ஒரு எதிர்கால நோக்கத்தையும் திட்டத்தையும் அமைக்க வேண்டியதும் அவசியமானதே.

பொதுநலம் கொண்ட வாழ்க்கை நல்லதுதான்.
Continue Reading | கருத்துகள்

வாலிபனே உன் சிலுவை எங்கே?


நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் தீங்கனுபவி.’
2தீமோத்தேயு 2.3
மனதுக்கு இதமானதும், மகிழ்ச்சி தரக்கூடியதுமான ஏராளமான வாக்குத்தத்தங்கள், ஆலோசனைகள், ஆறுதல் மொழிகள் குவிந்து கிடக்கும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து குறிப்பாக இந்த வார்த்தையை சுட்டிக்காட்டும் போது சற்றுக் கடினமாகவே இருக்கும். கிறிஸ்தவ வாழ்வு என்பது சாதாரண மகிழ்ச்சி அல்ல; அது நித்திய மகிழ்ச்சி.
Continue Reading | கருத்துகள்

கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ Facebook ல்?


இன்று அதிகமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கம் “பேஸ்புக்” (Facebook) ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. பூமியில் வயது வரம்பின்றி அநேகர் இதினால் கவரப்பட்டுள்ளனர்.

“காம்ஸ்கோர்-”ன் ஆய்வின்படி, தற்போது இந்தியர்கள் தேசங்களின் வரிசையிலான பேஸ்புக் புள்ளி விபரத்தின் படி 4.5 கோடி நபர்கள் உபயோகிப்பதால் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். 
Continue Reading | கருத்துகள்

எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-04


பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கர்கள் எருசலேம் பட்ணம் அழிக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கின்றனர். 

ஆனால் அத்தீர்க்கதரிசனங்களெல்லாம் கி.மு. 586ல் நேபுகாத் நேச்சார் எருசலேமை அழித்ததைக் குறிக்கும் என்று விவாதிக்க முயும். ஏனென்றால் அத் தீர்க்கதரிசனங்களெல்லாம் கி.மு. 586 க்கு முன் உரைக்கப்பட்டவை.
Continue Reading | கருத்துகள்

உலகின் முதலாவது யூதன் மற்றும் அவனது நாடு


நோவாவின் இரண்டாவது குமாரன் காமுடைய மக்களில் ஒருவன் கானான். (ஆதியாகமம் 10:6). கானானுடைய சந்ததியார் சீதோன் முதல் காசா பட்டணம் மட்டும் பரவி வாழ்ந்தார்கள் (ஆதியாகமம் 10:19). அவர்கள் வாழ்ந்த நாட்டிற்குக் கானான் நாடு என்று பெயர் வந்தது.
Continue Reading | கருத்துகள் (3)

இஸ்லாமிய நண்பர் ஒருவரின் கேள்விக்கு நமது பதில்

இஸ்லாமிய நண்பர் ஒருவரின் கேள்விக்கு நமது பதில்

இஸ்லாமிய சகோதரரின் கேள்வி
கிருஸ்துவ சகோதரர்களே நானும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் உங்களிடம்.. 
சர்வ வல்லமை படைத்த ஏசுவுக்கு ஏன் அவ்வளவு கொடுமையான மரணம்..

Continue Reading | கருத்துகள் (2)

தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-03


நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்
தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல்


யூதர்கள் கி.பி. 70ம் ஆண்டிலும், கி.பி. 135ம் ஆண்டிலும் ரோம அரசாங்கத்தால் பலஸ்தீனா நாட்டிலிருந்து விரட்டப்பட்டு உலகத்தின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்து குடியேறினர். அவர்கள் போய்ச் சேர்ந்த நாடுகளிலும் நிம்மதியாகக் குடியிருக்க முடியாதபடி ஆண்டவர்
Continue Reading | கருத்துகள்

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.