இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களை எட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப் பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம் உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார்.
அன்பே என்னை மன்னிப்பாயா?
ஒய்யார வானம்,
வட்ட நிலா,
ஓடும் நதி,
ஓரமாய் ஒரு மொட்டைப்பனை,
உச்சியில் ஒரு ஒற்றைக் குருவி
மனதில் எழுகின்றன கற்பனைக் குவியல்
நதியின்
சலசல இரைச்சல் அதற்கு பிள்ளைகளின் அழுகுரலாய் கேட்கிறது.
நிலாவின் வெண்மை முகத்தில் மனைவியின் பாசத்தைக்
காண்கிறது அந்தக் குருவி.
எங்கிருந்தோ வரும் தாமரை வாசனை மனைவியின்
அணைப்பில் உண்டாகும் சுகந்தம் போல இருந்தது அந்தக் குருவிக்கு.
தனிமையை உணர உணர “ஜில்” என்ற குளிருடன் கண்ணீர்
கன்னத்தை நனைக்கிறது. நிலாவின் ஒளியும் நெருப்பாய் கொதிக்கிறது.
குஞ்சுகளையும் மனைவியையும் பிரிந்த மூன்று
நாட்கள் மூன்று யுகங்கள் போல இருந்தது அந்தக் குருவிக்கு.
இத்தனைக்கும் மனைவியின் அந்த ஒரேயொரு வார்த்தையே
காரணம்.
இத்தனை வருடம் அவளை அன்பாக கவனித்தவன் நான்.
அவள் கண்களில் கண்ணீர் கசியாமல் காத்தவன் நான்.
என்னை சந்தேகப்பட்டு அவள் அந்த வார்த்தையை
சொல்லியிருக்கவே கூடாது. என் அன்பை புரிந்து கொள்ளாத அவளோடு இனிமேல் வாழ்ந்தென்ன பிரயோஜனம்.
என்றெல்லாம் நினைத்து வீட்டை விட்டு வந்து
விட்டது அக்குருவி
தனிமையின் கொடுமை ஒரு புறம் “மனைவி என்னை
எங்கெல்லாம் தேடுகிறாளோ” “குஞ்சுகள் என்ன பாடுபடுகின்றனவோ” என்ற எண்ணங்களின் கொலைவெறி
மறுபுறம்.
இரண்டையும் முறித்துக் கொண்டு வருகின்றது
“இல்லை இல்லை என்னில் தவறில்லை அவள்தான் குற்றம் செய்தாள்” என்ற சுயகௌரவம்.
எண்ணங்களின் புயல் ஓய மீண்டும் அமைதி நிலைக்கு
வருகிறது குருவியின் மனம்.
எங்கோ ஒரு மூங்கில் காட்டில். மூங்கில்களில்
வண்டுகள் போட்ட துளைகளினூடே செல்லும் தென்றல் காற்றால் உண்டாகும் இதமான ஓசையினூடாக
காதில் பேசிய இறைவனின் குரலைக் கேட்டது அக்குருவி.
திடீரென ஏதோ ஒரு முடிவை எடுத்ததாய் பறவை
சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கியது. நேராக கூடு சென்றது.
கண்ணீர் மல்க பிள்ளைகளை அணைத்தபடி அழுது
கொண்டிருந்த மனைவியை கட்டி அணைத்துக் கொண்டது.
ஏதோ பேச வாய் திறக்கும் முன்னே மனைவியின்
வாய் முந்திக் கொண்டது. அன்பே என்னை மன்னித்துக்கொள்
தொடர்ந்தது குருவி.
நான் உன்னை மன்னிக்கிறேன். என்னையும் நீ
மன்னித்துக் கொள்
அணைப்பு வரவர இறுக்கமாகிக் கொண்டே போனது.
இப்போது இரண்டு குருவிகளின் கண்களிலும் உண்டான
கண்ணீருக்கு மகிழ்ச்சிதான் காரணமாக இருந்தது.
இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே மூங்கில்களில்
வண்டுகளிட்ட துளைகளினூடே செல்லும் காற்றால் உண்டாகும் இதமான ஓசையூடாக இறைவன் அக்குருவியின்
காதில் என்ன பேசியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.
உன் மனைவியை நீ ஏன் மன்னிக்ககூடது?
அன்பானவர்களே இயேசு உங்களைப் பார்த்து கேடகிறார். எனக்கு அநியாயம் செய்தவர்களை நான் மன்னித்தேனே. உனக்கு அநியாயம் செய்தவர்களை
நீ ஏன் மன்னிக்க கூடது?
சிந்திப்பாயாக.
-----------------------------------------------------by - robert dinesh-----------------------------------------------------
நட்சத்திரங்களை எண்ண முடியுமா? - ( வேதாகம அறிவியல்-09 )
வானத்தின் நட்சத்திரங்களை எண்ணமுடியுமென்று எண்ணிய அக்கால விஞ்ஞானிகள் அவற்றை ஆளுக்கொரு எண்ணிக்கையாக கூறிவந்தார்கள்.
கி.பி. 1608 ஆம் ஆண்டுக்கு பின் சில ஆயிரம் நட்சத் திரங்களை தொலைநோக்கிகளின் வழியே விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள ஆரம்பித்தனா்
சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் 1930 வரை நம்பினர். பிறகு 40 Sextillion நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட்டனர் (40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.)
ஆனால் அதற்கு முன்னால் எழுதப்பட்ட வேத வார்த்தையானது நட்சத்திரங்களை எண்ண முடியாது என்றது.
எது உண்மை? இன்றைய அறிவியல் என்ன கூறுகிறது?
நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று விஞ்ஞானிகள் முடிவாக அறிவித்து விட்டனர்.
வேத வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டாகி விட்டது.
தொலை நோக்கி இல்லாமலேயே, நட்சத்திரங்களைப் பற்றி வேத எழுத்தாளர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? சிந்தியுங்கள்
ஆனால்“அவா் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவை களுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். . (சங் 147.4) என வாசிக்கிறோம்
கடவுள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை யை அறிந்திருக்கிறதுமன்றி, அவைகளை பேரிட்டு அழைக்கிறார். மனித அறிவை பொறுத்த மட்டிலும், நம்மால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
மிகப் பெரிய தூரதிருஷ்டி கண்ணாடிகளின் மூலமாகப் பார்த்தாலும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை முற்றிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













