நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , , , » இறைவன் இருக்கின்றானா?... மனிதன் கேட்கிறான்

இறைவன் இருக்கின்றானா?... மனிதன் கேட்கிறான்


தேவன் இல்லையென்பது விஞ்ஞான உலகத்தின் உயிர் மூடிச்சு. கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை நிரூபிக்க அரசியல் விஞ்ஞானத் துறைகளில் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

உண்மையிலேயே கடவுள் இல்லையென்றால், இதை நிரூபிக்க இத்தனை பெரிய முயற்சிகள் தேவயில்லை. இல்லாத ஒன்றை இல்லை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க எடுக்கப்படும் முயற்சிகளே கடவுள் உண்டு என்பதற்கான ஆதாரங்களில் முக்கியமானதாகும்.

“Laws Of Cause and Eftect” என்ற விஞ்ஞான விதி என்ன கூறுகிறதென்றால், எல்லா விளைவுகளுக்கும் பின்னால் அதற்கான காரணம் ஒன்று உண்டு.
உலகில் பல விதமான கடிகாரங்கள் (Quartz Electronic) உள்ளன. விஞ்ஞானிகள் வானவியல் கடிகாரத்தை உபயோகிக்கின்றனர். இந்தக் கடிகாரம் பூமி சுழல்வதைப் பொரறுத்து செயல்படும். இவையெல்லாம் மனிதரால் உருவாக்கப்பட்டவை. எந்தக் கடிகாரமும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளாது. உலகக் கடிகாரங்களை எல்லாம் நிர்வகிக்கின்ற பூமி என்ற பெரிய கடிகாரம் மட்டும் எப்படி தன்னைத் தானே உருவாகிக்கொள்ள முடியும்? As The Earth Is An Effect Should Have Seen a “Cause That Made It” 

Effect Cannot Be Greater Than The Cause  உருவாக்கப்பட்டது உருவாக்கியதை விட சிறந்ததாக இருக்க முடியாது. மனிதன் கம்பியூட்டர்களையும் ராக்கெட்டுகளையும் கண்டுபிடித்தாலும் தன்னை விட பெரிதான எதையும் கண்டுபிடித்துவிடவில்லை. படைப்புக்களில் உயர்ந்தவன் மனிதன். மனிதனுக்கு எப்படி உயிரும் ஆள்தத்துவமும், உணர்ச்சிகளும் உள்ளதோ அது போலவே அவனை உருவாக்கிய சக்தியும் மனிதனைவிட உயர்ந்ததாக, உயிர் உணர்ச்சி ஆள்தத்துவம் உள்ளதாகத்தான் இருக்க வேண்டும். அந்த சக்தியே எல்லாவற்றிற்கும் மூல காரணர். He Is The Principal Cause For All The Effect.   

24மணி நேரத்திற்கு ஒரு முறை தன்னை சுற்றும் உலகம், இரவு, பகல், பருவகாலங்கள், குறிப்பிட்ட பாதையில் ஓடும் கிரகங்கள் எல்லாம் ஒரு திட்டத்தைக் காட்டுகின்றன. திட்டம் உண்டென்றால் அதை திட்டமிடுபவரும் நிச்சயம் இருக்க வேண்டும். If There Is a Design There Has To Be a Designer. தச்சன் இல்லாமல் மரம் தானாக நாற்காலியாக உருவெடுப்பதில்லை.

எந்தப் பொருளும் பூமியை நோக்கித்தான் விழுகின்றன. வானை நோக்கி செல்வதில்லை. இது இயற்கையில் நாம் காணும் சட்டம். அப்படியானால் சட்டத்தை உருவாக்கியவரும் இருக்கத்தான் வேண்டும். If There Is a Law There Has To Be a Law giver.

தெய்வம் இல்லையென்பவன் நாஸ்திகன். ஆனால் இவன் அதிகமாக சிந்திப்பது தெய்வத்தைப் பற்றிதான். இல்லாத ஒன்றைப் பற்றி ஏன் எப்போதும் நினைக்க வேண்டும்? இதுவும் தேவன் இருக்கிறார் என்பதற்கான அடுத்த ஆதாரமாகும்.

தொடக்கம் இல்லாமல் எதுவும் உருவாக முடியாது. பல மில்லியன் வருடங்களுக்கு முன் சுழன்றுக் கொண்டிருந்த வாயுக் கோளத்தில் இருந்து தான் எல்லாக் கிரகங்களும் வந்தது என்ற விஞ்ஞான உளரலை கணக்கிலெடுத்துக் கொண்டாலும், அந்த வாயுக்கோளம் எப்படி, எங்கிருந்து வந்தது? தொடக்கம் இல்லாமல் எவ்விதம் அந்த வாயுக்கோளம் உருவாக முடியும்?

சிந்தனையின் முடிவில் மனிதன் அறிவுப்பூர்வமான அதிர்ச்சி அடைகிறான். (ரோமர்-1:20) தேவன் உலகத்தை உருவாக்கினார் என்பதை சோதனைச் சாலையில் நிரூபிக்க முடியாது. என்பதால் குழப்பத்தின் எல்லைக்கு சென்று Darwin Theory போன்ற கெள்கைகளை ஏற்படுத்துகிறான். தேவன் உண்டு என்ற உண்மையை மறைக்கும் முயற்சியே டார்வின் தியரியாகும்.

கடவுளை நம்புபவன் முட்டாள் என்பதான நம்பிக்கையில் விஞ்ஞான உலகம் சென்று கொண்டிருப்பதால்; தேவன் இந்த உலகை சிருஷ்டித்தார் என்ற உண்மையை மனிதனால் ஜீரணிக்க முடியவில்லை. தேவன் உண்டென்ற உண்மையை வெளியே சொன்னால் அது, பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு பேரிடியாக இருக்கும். குரங்கிலிருந்துததான் மனிதன் பரிணாம மாற்றமடைந்து வந்தான் என்று எழுதப்பட்டிருக்கும் கல்வியியல் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகத்தையும் மாற்றி எழுத வேண்டியதாயிருக்கும். அதனால்தான் இந்த குழப்பமெல்லாம். 

இறைவன் இருக்கிறார் என்பதை விஞ்ஞானமே நிரூபித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அவர் இல்லை என்பதை யாராலும் தகுந்த முறையில் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கவே முடியாது

தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்திலே சொல்லிக் கொள்கிறான் – சங்கீதம். 14.

நன்றி உறவாடும் உண்மைகள்
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்