Latest Posts

நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » இயேசுவின் ஜெப வாழ்வு

இயேசுவின் ஜெப வாழ்வு


பரலோகத்தில் தேவனோடு தேவனுக்கு சமமாக இருந்த இயேசுக்கிறிஸ்து பூலோகத்திலிருக்கையில் தம்முடைய பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுகிறவராக காணப்பட்டார். அவர் மனுவுருக் கொண்டிருந்தமையால் அவர் ஜெபிக்க வேண்டிய தேவை இருந்தது. அத்துடன் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியை காண்பித்த இயேசு ஜெபத்திலும் முன்மாதிரியை வைத்துப் போனார். 

1பேது 2:21கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடா்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்

தன்னுடைய ஜெப வாழ்வில் இயேசுக்கிறிஸ்து எப்படி நமக்கு முன்மாதிரியை வைத்துப் போனார் என்பதை அறிய அவர் ஜெபித்தமை தொடர்பான வசனங்களை நாம் நோக்கலாம்.

சாயங்காலத்தில் ஜெபித்தார்

மத் 14:23 அவா் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்


அதிகாலையில் இருட்டோடே ஜெபித்தார்

மாற் 1:35 அவா் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்;.


இரவு முழுவதும் ஜெபித்தார்

லூக் 6:12 அந்நாட்களிலே, அவா் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்


மலையின் மேல் ஏறி ஜெபித்தார்

மாற் 6:46 அவா் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்


வனாந்தரத்தில் தனிமையாய் ஜெபித்தார்

லூக் 5:16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.


சீஷரோடு சேர்ந்து ஜெபித்தார்

லூக் 9:18 பின்பு அவா் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவா்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டா்


ஊக்கமாய் ஜெபித்தார்

லூக் 22:44 அவா் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்; அவருடைய வோர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.


ஒரே விடயத்துக்காக மீண்டும் மீண்டும் ஜெபித்தார்

மத் 26:44 அவா் மறுபடியும் அவா்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி,  ஜெபம்பண்ணினார்


முகங்குப்புற விழுந்து ஜெபித்தாரர்

மத் 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்;.

 

உரத்த சத்தமாய் கண்ணீருடன் ஜெபித்தார்

எபி 5:7 அவா் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,


Share this article :

0 $type={blogger}:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்

ABOUT ME

எனது புகைப்படம்
ROBERT DINESH
JESUS LOVED ME - Read More...

Contact Me Through This Form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *