உலகை சுமப்பது யார்? - ( வேதாகம அறிவியல்-06 )
அந்தரத்தில் தொங்கும் பூமி
அடலாஸ் என்னும் ஒருவர் எண்ணிலடங்கா பாரத்தைக்கொண்ட இந்த பூமியை சுமந்து கொண்டிருப்பதாக உலகிலேயே மிகச்சிறந்த ஞான வாதிகளாக கருத்ப்ப்ட்ட கிரேக்கர்கள் நம்பி வந்தனர்.
ஆரியர்களோ ஒரு பெரிய யானை இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர்.
ஆரியர்களோ ஒரு பெரிய யானை இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர்.
ஆனால் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட வேதாகமத்தின் யோபு நூலில் “பூமியை யாரும் சுமக்கவில்லை, பூமி அந்தரத்திலே தொங்க விடப்படி்டுள்ளது” என்ற மாபெரும் அறிவியல் உண்மை எழுதப்பட்டுள்ளது.
அவர் உத்திரமண்டலத்தை வெட்ட வெளியில் விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார். (யோபு 26.7)
வேதம் சொன்னபோது யாரும் நம்பவில்லை விஞ்ஞானம் கண்டு பிடித்து சொன்னபோது வேதத்தை நம்புகிறார்களள்.
வேதம் சொன்னபோது யாரும் நம்பவில்லை விஞ்ஞானம் கண்டு பிடித்து சொன்னபோது வேதத்தை நம்புகிறார்களள்.
உயிர் எங்கு இருக்கின்றது? - ( வேதாகம அறிவியல்-05 )
“உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?” என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயின் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது என்பதை மோசே ஆதி.9:4, லேவி.17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார். ஆனால் உலகில் இருந்த அறிவியல் வல்லுநர்கள் யாவரும் “மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது” என்று கூறி வந்தனர்.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதுய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக மரணமடைந்த ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்குப் பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவா் யார்? இருதயத்தைக் கொடுத்தவரா, அல்லது இருதுயத்தைப் பெற்றுக்கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது.
எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுப் போன பின்பும் மக்கள் நினைவின்றி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
உலகின் பல அறிவியல் வல்லுநர்கள் கூடி “உயிர் இரத்தத்தில் உள்ளது” என்ற கொள்கையை கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது.
----------------------------------by-robert dinesh-------------------------------
----------------------------------by-robert dinesh-------------------------------
பிர் அவ்னின் ( பார்வோனின் ) உடலும் குர்-ஆன் உம்
எப்படியெனில் இஸ்ரவேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பார்வோன் மன்னனைக் குறித்து வேதாகமத்தில் யாத்திராகமம் புத்தகத்தில் 14ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













