ஒரு குளத்தில் சில மீன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. பாசி களில்
புகுந்தும், கற்களிடையில் மறைந்தும், சந்தோஷமாக விளையாடிக்
கொண்டிருந்தன.
திடீரென ஓரிடத்தில்
"ச்சலக்" என்ற சத்தத்துடன் ஒரு இரை வந்து விழுந்தது. ஆவலோடு எல்லா மீன்களும் ஓடிச் சென்றன. அதில் முந்திச் சென்ற மீன் அந்த இரையைக் கவ்விக் கொண்டது. அந்த நொடியே அந்த மீன்
வேகமாக மேலே சென்று மறைந்து விட்டது.













