f

Latest Posts

நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

சரியான நம்பிக்கை

😔🤜🤜🤜🤽🐢 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாமெல்லாரும் கிறிஸ்துவை நம்புகிறோம்.  அதனால்தான் எமக்கு விசுவாசிகள் என்று பெயர். ஆனால் இந்த உலகில் கிறிஸ்தவர்களாக வாழும் நாம் நம்முடைய நம்பிக்கை சரியானதுதானா என்று பரிசோதிக்க வேண்டியுள்ளது.  நாமெல்லாரும் கிறிஸ்துவை தான் விசுவாசிக்கிறோம். ஆனால் சரியான முறையில் அவரை விசுவாசிக்கிறோமா என்பதே கேள்வி.

 ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்தவனாக வரும்போதே அவனுக்குள் தவறான நம்பிக்கைகள் திணிக்கப்பட்டு விடுகின்றன. நீ கிறிஸ்தவன் ஆகிவிட்டால் உன்னுடைய வாழ்வில் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை, என்ற சிந்தனை  அந்த மனிதனுக்குள் திணிக்கப்பட்டு விடுவதால் அவன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே போராட்டங்கள் வரும்போது அவனுடைய நம்பிக்கையை குறித்து  சந்தேகப்பட ஆரம்பிக்கிறான்.

 வேதாகமத்தில் காணப்படும் பரிசுத்தவான்கள் அனைவரும்  கிறிஸ்துவை குறித்தும் இரட்சிப்பை குறித்தும் சரியான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள்.  சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் நம்பிக்கை சிறந்த உதாரணமாகும்.  இதை குறித்து நாம் தானியேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இவர்கள் ராஜாவை பார்த்து தங்கள் சரியான நம்பிக்கையை அறிக்கையிட்டார்கள். அதாவது “தேவன் எங்களை தப்புவிக்க வல்லவர். அவர் தப்புவித்தாலும் சரி, தப்புவிக்காவிட்டாலும் சரி நாங்கள் எங்கள் தேவனை மட்டுமே பணிந்து கொள்வோம்” என்பதே அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. 

கர்த்தர் எனக்கு நன்மை செய்தால் மட்டுமே அவரை நம்புவேன். என்பது தவறான நம்பிக்கை.  ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நம்மில் பலருடைய நம்பிக்கை தவறானதாகவே இருக்கின்றது. நம்மில் ஒருவருக்கு வியாதி ஏற்பட்டால் அல்லது ஒரு சிக்கலில் நாம் மாட்டிக் கொண்டால் நம்மை சுகமாக்கும் படி அல்லது விடுவிக்கும்படி தேவனை நோக்கி  கதறுகிறோம்.  கொஞ்சம் தாமதமாகும் பட்சத்தில் எங்களுடைய நம்பிக்கை கேள்விக்குறியாகிறது. உடனே சந்தேகப்பட ஆரம்பிக்கிறோம்.   இப்படியான பிரச்சினைகளால் தேவனை சந்தேகித்து பின்வாங்கி போனவர்களும் உண்டு.  

இரட்சிக்கப்பட்டு  விடுவதால் ஒருவருடைய வாழ்வில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று வேதத்தில் எங்கும் இல்லை.  இவ்வுலகத்தில் வாழும் வரையும் பல உபத்திரவங்கள், போராட்டங்கள் உண்டு.  தேவனுக்காக தங்களை முழுவதும் அர்ப்பணித்து வாழுகிற மக்கள் கூட பலவிதமான உபத்திரவங்களை அடைந்தார்கள். உதாரணமாக யோபு தன்னுடைய வாழ்வில் சந்தித்த கொடுமையான உபத்திரவங்கள் மத்தியிலும் அவர் தன்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை.  ஆபேல் தேவனுக்கு பிரியமான பலிகொடுத்தது நிமித்தம் கொலை செய்யப்பட்டார். யேசபேல் காலத்து தீர்க்கதரிசிகள் கொலை செய்யப்பட்டார்கள். தேவனுக்கு உண்மையான ஊழியம் செய்த பவுல் கூட துன்பங்களை அனுபவித்தார்.  இயேசு கிறிஸ்து “உலகத்தில் இனிமேல் உங்களுக்கு எந்த உபத்திரவங்களும் இல்லை” என்று சொல்லவில்லை மாறாக உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன். என்று சொன்னார் .

 நான் தேவனுக்கு பிரியமானவனாய் வாழ்வதனால் எந்த உபத்திரவமும் எனக்கு வராது என்று நம்புவது ஒரு சரியான நம்பிக்கை அல்ல. ஆனால் நான் கிறிஸ்தவனாக வாழ்வதனால் எனக்கு பல உபத்திரவங்கள் வரும் இருப்பினும் நான் அவைகளை மேற்கொண்டு ஜெயம் எடுப்பேன் என்பதுவே சரியான நம்பிக்கையாகும். எந்த பிரச்சினையும் வராதபடி என்னை கிறிஸ்து காப்பார; என்பதல்ல, அவர; என்னை காக்கா விட்டாலும் அவரே தெய்வம் என்று நம்புவதே கிறிஸ்துவில் நாம் வைக்க வேண்டிய சரியான நம்பிக்கையாகும்.

 இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை புதிதாக இரட்சிக்கப்பட்டு சபைக்கு வரும் விசுவாசிகளுக்குள் நாம் புகுத்தினால் எந்த போராட்டமான சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை விட்டு பின்வாங்கி போக மாட்டார்கள். 


Continue Reading | $type={blogger}

இயேசுவின் ஜெப வாழ்வு


பரலோகத்தில் தேவனோடு தேவனுக்கு சமமாக இருந்த இயேசுக்கிறிஸ்து பூலோகத்திலிருக்கையில் தம்முடைய பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுகிறவராக காணப்பட்டார். அவர் மனுவுருக் கொண்டிருந்தமையால் அவர் ஜெபிக்க வேண்டிய தேவை இருந்தது. அத்துடன் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியை காண்பித்த இயேசு ஜெபத்திலும் முன்மாதிரியை வைத்துப் போனார். 

1பேது 2:21கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடா்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்

தன்னுடைய ஜெப வாழ்வில் இயேசுக்கிறிஸ்து எப்படி நமக்கு முன்மாதிரியை வைத்துப் போனார் என்பதை அறிய அவர் ஜெபித்தமை தொடர்பான வசனங்களை நாம் நோக்கலாம்.

சாயங்காலத்தில் ஜெபித்தார்

மத் 14:23 அவா் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்


அதிகாலையில் இருட்டோடே ஜெபித்தார்

மாற் 1:35 அவா் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்;.


இரவு முழுவதும் ஜெபித்தார்

லூக் 6:12 அந்நாட்களிலே, அவா் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்


மலையின் மேல் ஏறி ஜெபித்தார்

மாற் 6:46 அவா் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்


வனாந்தரத்தில் தனிமையாய் ஜெபித்தார்

லூக் 5:16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.


சீஷரோடு சேர்ந்து ஜெபித்தார்

லூக் 9:18 பின்பு அவா் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவா்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டா்


ஊக்கமாய் ஜெபித்தார்

லூக் 22:44 அவா் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்; அவருடைய வோர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.


ஒரே விடயத்துக்காக மீண்டும் மீண்டும் ஜெபித்தார்

மத் 26:44 அவா் மறுபடியும் அவா்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி,  ஜெபம்பண்ணினார்


முகங்குப்புற விழுந்து ஜெபித்தாரர்

மத் 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்;.

 

உரத்த சத்தமாய் கண்ணீருடன் ஜெபித்தார்

எபி 5:7 அவா் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,


Continue Reading | $type={blogger}

இன்றைய ஆராதனையும் நாமும்

அன்று இயேசு சொன்னார் 'நீங்கள் அப்பம் கேட்டால் பிதா கல்லைக் கொடுக்க மாட்டார்' அனால் இன்று நாம் செய்கிறோம். தகப்பன் அப்பம் கேட்கிறார் நாம் கல்லைக் கொடுக்கிறோம். 

புரியும்படி சொல்கிறேன்: நமக்கெல்லாருக்கும் தகப்பன் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆராதனை வேறு. நாம் அவருக்கு கொடுக்கும் ஆராதனை வேறு. 

வாழ்வே ஆராதனையாகிறதா?

வாழ்க்கையையே ஆராதனையாக கேட்கும் அவருக்கு வாரத்தின் ஒரு நாளின் ஒரு மணி நேரத்தை மட்டுமே கொடுத்துவிட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறோம். 

உபாகமம்-18:5 சொல்கிறது எந்நாளும் தேவனை ஆராதிக்கும்படிக்கே தேவன் லேவி கோத்திரத்தை தெரிந்து கொண்டாராம். 

மற்றும் தானியேல்-06:16 இல் தரியு ராஜா தானியேலை பார்த்து 'நீ இடை விடாமல் ஆராதிக்கும் தேவன் உன்னைத் தப்புவிப்பார்' என்று கூறுகிறார். 

என்னது? இடைவிடாமல் ஆராதிப்பதா? வேறு வேலைகள் செய்வதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியல்ல. ஆராதனை என்பது சபையாக கூடி, பாடல்கள் பாடி, பற்பல பாஷைகளைப் பேசி, இசைக்கருவிகளால் ஒலியெழுப்புவது மட்டுமல்ல. நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்கள் மூலமும் தேவனை மகிமைப்படுத்துவதேயாகும். 

வேதத்தில் 1கொரி-10:31 சொல்கிறது 'நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்' ஆம் அதுதான் தேவன் விரும்பும் ஆராதனை. அவரை நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் மகிமைப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் சிறப்பான அராதனையாகும்.

அனால் இன்று நாம் என்ன செய்கிறோம்? திங்கட்கிழமை திருட்டுத்தனம், செவ்வாய்க்கிழமை செவித்தினவு(2தீமோ-4:3), புதன்கிழமை புழுகுத்தனம், வியாழக்கிழமை விக்கிரகாராதனை, வெள்ளிக்கிழமை வெகுளித்தனம், சனிக்கிழமை சகடைத்தனம். இவ்வாறு வாரநாள் முழுவதும் விளங்கிப்போகாத பல்வகைமைப் பாவங்களையும் கலந்து பருகிவிட்டு ஞாயிற்றுக் கிழமையானதும் பரிசுத்தக் குஞ்சுகள் போல பரிசுத்த தேவனை ஆராதிக்க பகட்டாக கூடி வருகிறோம். யாரை ஏமாற்றுகிறோம் தேவனையா? நம்மையேயல்லவா? தேவன் எதிர் பார்ப்பதில் கொஞ்சத்தைக் கூட நம்மால் கொடுக்க முடியாதுள்ளது.


தேவன் மகிமைப்படுகிறாரா?

ஆராதனையில் தேவன் மகிமைப்பட வேண்டும் என்பதே தேவனுடைய எதிர்பார்ப்பாகும். ஆனால் நாம் காணும் பல ஆராதனைகளில் புகை இருக்கிறது கூடவே பகையும் இருக்கிறது, சத்தம் இருக்கிறது தேவனுடைய சித்தம் இல்லை, பல வர்ண விளக்குகள் ஒளிர்கிறது ஆனால் தேவ வெளிச்சம் இல்லை. ஆராதனையாளன் எனப்படுபவன் இருக்கிறான் ஆனால் நிஜமான ஆராதனையாளன் இல்லை.

மொத்தத்தில் ஆராதனை நடத்துபவனுக்கும் பாடகனுக்குமே மகிமை போய்ச் சேருகிறது. தேவனுக்கு அதினால் எந்த மகிமையும் இல்லை. தேவன் பார்வையாளனாக காணப்படுகிறார். 

மனிதனின் மகிமைக்காகவும் புகழ்ச்சிக்காகவும் ஆராதனைகள் நடத்தப்பட்டு அழகான எடிட் பண்ணப்பட்ட புகைப்படங்களுடன் ஒளி இறுவட்டுகளாக ஆராதனைகள் வெளிவருகின்றன. அதை வீடுகளில் போட்டு பார்த்துவிட்டு ஆராதித்து மகிழ்ந்தது போன்ற திருப்தியில் நாம் மூழ்கி விடுகிறோம். இதைக்குறித்து வசனம் இவ்வாறு கூறுகிறது. சங்-4:2 மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். 

ஆராதனைகள் 'தேவனுக்கு மகிமையை கொடுக்கிறோம்' என்னும் பேரில் தான் நடக்கிறது. ஆனால் மகிமை போய்ச் சேருவதெல்லாம் நடத்துனருக்கே. தாங்கள் இயற்றும் பாடல்களையே தங்கள் ஆராதனைகளில் பாடுவார்கள். இதுக்கு என்ன காரணம். அவர்கள் இயற்றுவது மட்டும் தான் பாடலா? தெளிவாக  தெரிகிறதல்லவா? தங்களை பிரசித்தம் பண்ணவும் புகழ் தேடவும் அராதனை நடத்துவது வாடிக்கையாகி விட்டடது.


தேவன் எதிர்பார்க்கிற படி அமைகிறதா?

தேவன் ஆவியோடும் உண்மையோடும் நாம் அவரை ஆராதிப்பதை விரும்புகிறார் என்று யோவான்-4:23 கூறுகிறது. 

இன்று நாம் ஆவியோடு ஆராதிப்பதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல ஆவிகள் புகுந்து நம்முடைய ஆவியுடன் விளையாடிக்கொ ண்டிருக்கின்றன. நம்முடைய ஆவியை அலைய விட்டுவிட்டு வாயினால் ஆராதிக்கிறோம். இதைத்தான் தேவன் இவ்வாறு கூறுகிறார். ஏசா-29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்ளூ அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறதுளூ அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

சரி ஆவியோடு ஆராதிக்கவில்லை உண்மையோடாவது ஆராதிக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆண்டவர் பொய்களை துருத்தியில் சேர்த்து வைப்பதாக சொல்லியிருந்தால் இன்நேரம் நம்முடைய துருத்திகள் நிரம்பி வழிந்திருக்கும்.

ஆராதனைகளில் பாடும் பாடல்களில் பல பாடுபவர்களுக்கு உண்மையில்லை. 'உம்மையல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே என்று பாடுபவன் 'ஆண்டவரே என் மனவிருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று சொன்னீரே எனக்கு ஒரு அழகான வீடு கட்டித் தாருமையா' என்று ஜெபிக்கிறான். 'நீரே எல்லாம்' என்று பாடுபவன் வெளியே போனவுடன் 'கட்டினா அவள கட்டணும்டா' என்று அடம் பிடிக்கிறான். பாடும் போது, துதிக்கும் போது அது உண்மையா என்று ஆராய வேண்டும்.

இன்றைய ஆராதனைகள் பலவற்றில் ஆவியும் இல்லை உண்மையும் இல்லை. இதுதான் 'நாமும் நம்முடைய ஆராதனையும்' என்ற நோக்கில் பார்க்கும் போது புலப்படும் காரியம்.

  • முதலாவது நம்மடைய வாழ்வு ஆராதனையாகவுமில்லை
  • நாம் கூடி ஆராதிக்கும் போது அதில் தேவனுக்கு மகிமை கொடுப்பதும் இல்லை.
  • தேவன் விரும்பும் ஆராதனை செலுத்துவதுமில்லை.


இதற்கெல்லாம் விதிவிலக்காக உண்மையாய் ஆராதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

by- Roberrt Dinesh

Continue Reading | $type={blogger}

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா?

வேதாகமக் கோட்பாடுகள் முரண்பட்டவையா?

ஒரு இஸ்லாமிய நண்பர் எங்கோ கொப்பி செய்து முகநூலில் பகிர்ந்து கொண்ட வேதாகமத்துக்கெதிரான சில கேள்விகளுக்கு இக்கட்டுரையில் பதில் தருகிறேன்.

அவர் எழுதியவை சிவப்பு எழுத்திலும் ஹைலைட் பண்ணப்பட்டும் உள்ளன. என்னுடைய பதில்கள் கறுப்பு எழுத்தில் இங்கே தரப்படுகிறது.

எல்லோரையும் மீட்கும் பொருட்டாக ஏசு சிலுவையில் மறித்தார் என கிருத்துவர்கள் கூறுகிறார்கள்....! பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்திய ஏசுவின் துன்பம் மரணம் பற்றிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே கிருத்துவம் போதிக்கப்படுகிறது..!! .!!இக்கோட்பாடு ஏசுவின் கோட்பாட்டிற்கு முறன்பட்டதேயாகும்..!!

/////////எல்லோரையும் மீட்கும் பொருட்டாக ஏசு சிலுவையில் மறித்தார்     என கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.!////////
இயேசு எல்லாரின் பாவங்களுக்காக மரித்தார் என்று கிறிஸ்தவர்கள் தங்கள் விருப்பத்தின் படி கூறுவதில்லை. அது வேதாகமம் சொல்லும் கருத்தாகும். மரித்தார் என்பது மட்டுமல்ல மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்தார் என்றும் வேதாகமம் கூறுகின்றது.

//////// பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்திய ஏசுவின் துன்பம் மரணம் பற்றிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே கிருத்துவம் போதிக்கப்படுகிறது..!! /////////
இயேசுவின் துன்பம் மரணம் என்னும் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமல்ல இயேசுவின்  உயிர்தத்தெழுதல் என்னும் உண்மை நிகழ்வின் அடிப்படையிலும்தான் கிறிஸ்தவம் போதிக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல இக்கோட்பாடுகள் பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்தியது என்று யார் சொன்னது? இஸ்லாமிய அறிஞர்கள் இப்படி பொய்களை புனைவதை அப்படியே உண்மை என்று  நம்பி அதை கொப்பி பேஸ்ட் செய்யும் இஸ்லாமிய அப்பாவிகள் இப்படித்தான் மாட்டிக் கொள்கிறார்கள். தம்முடைய துன்பம் மரணம் பற்றி இயேசுவே பல தடவைகள் முன்னறிவித்தார். அது மட்டுமல்ல பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் கூட மீட்பரின் பாடுகள் மரணம் பற்றி அதிகமாக கூறியுள்ளார்கள். பைபிளை நன்கு படியுங்கள்.

 ////////இக்கோட்பாடு ஏசுவின் கோட்பாட்டிற்கு முறன்பட்டதேயாகும்..!! //////////
இது மகா பெரும் பொய்யாகும். இயேசுவின் கோட்பாட்டுக்கு இது முரண்பட்டது என்றால் இயேசுவின் கோட்பாடு எது என்பதை உங்களால் கூற முடியுமா? தன்னுடைய பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் போன்றவற்றின் மூலம் உலக மக்களுக்கு மீட்பு உண்டாகும் என்பதே இயேசுவின் கோட்பாடு. இதைத்தான் பவுலும் பேதுருவும் மற்ற அனைத்து சீடர்களும் போதித்தனர்.
இயேசு தன்னுடைய கோட்பாட்டை தம்முடைய வாயாலே சொல்கிறார். கீழே நான் பதியும் வேத வசனங்களை வாசியுங்கள். இவை இயேசு தம்முடைய சொந்த வாயாலே சொன்னது.
· மாற்-10:45/மத்-20:28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
·         (மத் 26:28) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
· மத்-17:23 அவா்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்ததெழுந் திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
·  மாற்-8:31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவா்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
· மாற்-9:31 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷா் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவா்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவா்; தம்முடைய சீஷா்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
·        லூக்-9:22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

அது மட்டுமன்றி இது தீர்க்கதரிசிகளால் கூட முன்னறிவிக்கப்பட்டிருந்த விடயமாகும். எசாயா 53ம் அதிகாரம் முழுவதையும் படிக்கவும்.
  • ஏசா 53:11 அவா் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரா் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவா்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் ஏசு சிலுவையில் மறிப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது அவனவன் செய்யும் நற்காரியங்களுக்கு ஏற்ப அவனவன் பாவங்கள் மன்னிக்கபடும் என்றே பைபில் கூறுகிறது..!!

///////// மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் ஏசு சிலுவையில் மறிப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது //////////
இது உங்களுடைய சொந்த கருத்து. எந்த ஆதாரமும் அற்றது. ஆனால் வேதாகமம் இவை இரண்டுக்குமிடையில் மிகவும் தொடர்பு இருப்பதாக கூறுகிறது.
  • மாற்-10:45/மத்-20:28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்
  • (மத் 26:28) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

//////அவனவன் செய்யும் நற்காரியங்களுக்கு ஏற்ப அவனவன் பாவங்கள் மன்னிக்க படும் என்றே பைபில் கூறுகிறது..!! ////////
இப்படி வேதாகமம் ஒரு தடவை கூட சொல்லவில்லை. இப்படி வேதாகமத்தில் எங்கே இருக்கிறது என்று உங்களால் காட்ட முடியுமா? நீங்கள் எப்படிப்பட்ட பொய்யர் என்பது உங்களுக்கு விளங்குகிறதா? பைபிள் சொல்லாத ஒன்றை அது சொல்வதாக இவ்வளளவு தெளிவாக பொய் கூறுகின்றீர்களே. நற்கிரியைகளால் பாவமன்னிப்பு கிடைக்காது.

//////////ஆதாம் செய்த பாவத்திற்காக ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்து ஏசுவை பிடித்து தன்டிப்பது நீதியா ?? /////////
எது நீதி என்று கடவுளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. மேலும் இயேசு தம்மைத் தாமே அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார். அவரை யாரும் துரத்திப் பிடிக்க வேண்டியிருக்கவில்லை. தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.

/////////ஏசு சிலுவையில் துன்பப்பட்டது மனித குலத்தின் பாவத்திற்காக என்றால் ஆதத்தின் ஆதிபாவத்திற்காக ஆயிரம் ஆண்டுகள் கழித்தா கடவுளுக்கு கருனை வரவேண்டும்..!! /////////
அதற்கு முன்பு கடவுளுக்கு கருணை இல்லாமலா இருந்தது?. ஆதியிலிருந்தே தேவன் அன்பானவர்தான். ஆனால் எல்லாவற்றுக்கும் அவர் நியமித்த காலங்களும் சமயமும் ஏற்பட வேண்டும்.


பாவம் எவ்வகையில் நீக்கப்பட்டது? ஏசுவின் காலம்வரையுள்ள மக்களின் பாவம் நீக்கப்பட்டதா?? இல்லை சமகாலத்திய மக்களின் எல்லா பாவமும் நீக்கப்பட்டதா?? இஸ்ரவேலர்களுக்கு மட்டுக் நீக்கப்பட்டதா?? இல்லை கிருத்துவர்களுக்கு மட்டும் நீக்கப்பட்டதா?? இக்கேள்விக்கு தெளிவான பதில்  எந்த சுவிசேசங்களிலும் இல்லை.!!

/////பாவம் எவ்வகையில் நீக்கப்பட்டது? ஏசுவின் காலம்வரையுள்ள மக்களின் பாவம் நீக்கப்பட்டதா?? இல்லை சமகாலத்திய மக்களின் எல்லா பாவமும் நீக்கப்பட்டதா?? இஸ்ரவேலர்களுக்கு மட்டுக் நீக்கப்பட்டதா?? இல்லை கிருத்துவர்களுக்கு மட்டும் நீக்கப்பட்டதா?? ////////
இது சரியாக சிந்திக்கும் ஒருவர் கேட்கக் கூடிய கேள்வி அல்ல.
இயேசுவின் மரணத்தின் மூலம் யாருடைய பாவமும் நீக்கப்படவில்லை. மாறாக இதுவரை வாழ்ந்த, இப்போது வாழுகிற, இனிமேல் வாழப் போகிற யாவருடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்யப்பட்டுள்ளது. அதுவே பலி என்று சொல்லப்படுகின்றது..யாரெல்லாம் அந்த இயேசுவை ஏற்றுக் கொண்டு அந்த பரிகாரம் தனக்காகவும் செலுத்தப்பட்டது என்று நம்புகிறானோ அவனுக்கு அந்த பரிகாரத்தில் உரிமை கிடைக்கிறது. பங்கும் கிடைக்கிறது. அதன்பின் அந்த மனிதன் தான் அந்த பரிகாரத்தை பெறுமுன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் கடவுளிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பு பெற்றுக் கொள்வான். அதன் பின்பு பாவம் செய்யாமல் இருக்க பரிசுத்தாவியானவரின் உதவியை பெறுகிறான். அவரின் உதவியை உதாசீனம் செய்யாமல் வாழ்ந்தால் பாவமின்றி வாழலாம். பாவம்செய்து வாழ்ந்தால் அவனுக்கு தண்டணை உண்டு.
  • 1யோவா-1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகாிப்பதற்கு அவா் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
  • 1யோவா-1:7 அவா் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவா் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
  • அப்-16:31 அதற்கு அவா்கள்: கா்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் ……

/////இக்கேள்விக்கு தெளிவான பதில் எந்த சுவிசேசங்களிலும் இல்லை.!! /////////
சுவிசேஷம்தான் பதில் தர வேண்டும் என்று ஏன் ஒற்றைக்காலில்நிற்கிறீர்கள் சகோதரரே? வேதம் பதில் சொல்லாமல்  இல்லையே? மேலே உள்ளவசனங்களை வாசியுங்கள்.

///////// ஏசு கூறுகிறார் இஸ்ரவேலரின் வீட்டாருக்கு அனுப்பபட்டேனேயின்றி மற்றபடியல்ல என்று (மத்-15.24) இஸ்ரவேலருக்கு தூதராக வந்த ஏசு எப்படி உலக மக்களின் அல்லது கிருத்துவரல்லாத மக்களின் பாவங்களை துடைக்க முடியும்?? ஏசு அனுப்பப்பட்டது குறிப்பிட்ட இனத்திற்கு ஆனால் சிலுவையில் மறித்ததோ..! மனிதகுல அனைத்திற்க்கும் என்றால் இது முரண்பாடு அல்லவா ??

!! ஒரு தேசிய தூதர் எப்படி அகில உலகத்திற்கு இரச்சகராக முடிந்தது ?? //////////

இந்த கேள்விக்கு தெளிவான பதிலை நான் வேறொரு கட்டுரையாக ஏற்கனவே எழுதியுள்ளேன். “இயேசு முழு உலகத்தாருக்கும் அனுப்பபட்டவரா..???’ என்னும் தலைப்பில் அந்த கட்டுரையை எழுதியுள்ளேன். இன்னொரு இஸ்லாமிய நண்பருக்கு பதில் கட்டுரையாக அதை எழுதினேன். விரும்பினால் இந்த லிங்குக்கு சென்று வாசித்துகொள்ளுங்கள். http://www.siluvai.com/2016/09/blog-post.html

நீங்கள் எல்லாரும் அதே கேள்விகளைத்தான் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

////////தடுக்கப்பட்ட கனியைதின்றவர் ஒருவர் (ஆதாம்) அதன் சுவையரியாத (ஏசு) இன்னொருவரை தன்டிப்பது நீதியா ?? //////////

மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காக இயேசு தன்மேல் அதற்கான தண்டணையை ஏற்றுக் கொண்டார் என்று வேதம் சொல்வதை புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறீர்கள். தேவனுடைய நீதி உங்களுக்கு பைத்தியமாக தோன்றுகிறது. சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாமய் தோன்றும் என்பதை வேதம் சொல்லி விட்டது.
Continue Reading | $type={blogger} (2)

கேள்வியும் பதிலும்

ABOUT ME

எனது புகைப்படம்
ROBERT DINESH
JESUS LOVED ME - Read More...

Contact Me Through This Form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

forum

Facebook

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.

Categories