நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?

யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?

முதலில் இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ்ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளை யே இக்கூட்டம் சத்தியமாக பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார்.இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்தரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை.
அவரது மனைவி, ரசல் ஆணவம் பி‍டித்த மனிதன் என்றும் எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றம் சாட்டி அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள் சொத்து க்களை தனக்குக் கொடுத்து விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின் பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரசல் நீதி மன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார். ரசல் இறந்த பின் ஜோசப் பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin Rutherford) இந்நிறுவனத்தின் தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன் ‍ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்கு யெகோவாவின் சாட்சிகள்என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின் புதிய உலக மொழி பெயர்ப்புவெளியிடப்பட்டது. இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றது.


இவர்கள் போதிப்பதென்ன?

யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம் கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.
1. காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும் உருவா க்கினார் என்று போதிக்கும் இக்கூட்டம் வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது. திரித்துவப் ‍போதனை கிறிஸ்தவ த்தின் அடிப்படைப் போதனை.
2. கிறிஸ்து கடவுளால் ஆரம்பத்தில் படைக்க ப்பட்டவர். இயேசு கிறிஸ்து நித்திய த்திலிருந்து கடவுளின் குமாரன் அல்ல என்று இக்கூட்டம் விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும், அவரே மைக்கல் என்ற தலைமைத் தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். கிறிஸ்து ஒருவிதத்தில் கடவுள்தான் ஆனால், யெகோவா போன்ற கடவுள் இல்லை என்பது இவர்களின் விசுவாசம். கிறிஸ்து தேவ குமாரனே‍யொழிய கடவுள் இல்லை. கிறிஸ்து  மனிதனாக உலகில் தோன்றியபோது அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இருக்கவில்லை என்றும் ஆனால் முழு மனிதனாக மட்டும் இருந்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனித னின் பாவநிவாரணத்திற்காக கொடூரமான மரணத் தை சந்தித்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

இதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து, கடவுள் என்பதை மறுக்கும் எவரும் வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியா கமம் முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து நித்தியத்தி லிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was eternally the Son of God) என்று வேதம் தெளி வாகப் ‍போதிக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு தனது  ‍தெய்வீகத் தன்மையில் எதையும் இழக்கவில்லை.
3. பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்ல‍மையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத்தன்மை பொருந்திய வரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.

இது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத் தவராக, ஓர் நபராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள் என்றும் வேதம் போதிக்கின்றது.
4. மனிதனுக்கு அழிவற்ற நித்திய ஆத்துமா(Immortal soul) இல்லை. ஆகவே அவன் இறந்தபின் காற்றோடு  கலந்து இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. ஆனால்  மனிதன் அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான் என்று வேதம் போதிக்கின்றது.
5. நித்திய நரகம் என்று ஒன்றில்லை என்றும், நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான் என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு மாறாக பாவியான மனிதன் இறந்தபின் நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான்என்றுதெளிவாகப்போதிக்கின்றது.


-------------------------------------------http://sridharan.mywapblog.com/---------------------------
Share this article :

6 கருத்துகள்:

ஷாபு ஜெ சொன்னது…

//பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்ல‍மையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத்தன்மை பொருந்திய வரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.//

அணால் கிழேகோடுக்கபட்டுள்ள பைபிள்வார்த்தைகள் பரிசுத்தஆவி திரியேகத்தின் ஓரு அங்கம் தான் என்ரு தேள்ள தேளிவாக புரியும். அவர் ஓரு வல்லமைமட்டும் அல்ல ஓரு திரித்துவத்தில் ஓருவரும் கூட எண அறியலாம்.

அபாபோஸ்தலர் 19:6

6. அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, (பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்;) அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித்தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.

அபாபோஸ்தலர் 20:23

23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று (பரிசுத்தஆவியானவர்) பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.

எபிரேயர் 3:7

7. ஆகையால், (பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே:) இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்

மேலும் கிழே உள்ள வசணம் திருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் மற்றும் அதன் முலம் தான் நித்தியவாழ்வான பரலோகம் சேல்லமுடியும் என்றும் நான்றாக அறியலாம்.

1 யோவான் 5: 1 முதல் 13 வாரை வாசிக்கவும்.

1 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.


2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.

3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

6 இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.

7 (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

8 பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

9 நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.

10 தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.

11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.

12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.

இன்னும்மாவது யெகோவாவினர் திறுத்துவத்தை அறிந்துகோணடு அவர்களின் பைபிளின் தவரன புரிந்து கோள்ளுதலை விட்டுவிட்டு மணம் மாறினால் அவர்களின் நித்தியவாழ்வுக்கு நலமாக இருக்கும்.

robert dinesh சொன்னது…

நன்றி சகோதரா வசனம் மூலமாகவே தெளிவான விளக்கம் கொடுத்து விட்டீர்கள்

பெயரில்லா சொன்னது…

parisutha aavi oru aal enru oru vasanam kuda kodukkavilaiye..
Parisuththa aavi aal enral Acts 7:55 isthevaan ean pithavaiyum, kumaranaiyum parkkiraar.. parisuththa aavi engu ponathu??

HI CHRISTIANS.COM சொன்னது…

நண்பரே பரிசுத்தாவியானவர் ஒரு நபர் என்பதற்கு மேலே ஷாபு ஜெ என்ற நண்பர் அடைப்புக் குறிக்குள் போட்ட வசனங்களே போதுமான ஆதாரங்களாகும். நீங்கள் அவற்றை சரியாக வாசிக்கவில்லை போலும்.

மேலும் மேலதிகமான தகவல் தேவைப்படின் கீழுள்ள இந்த லிங்குக்கு சென்று வாசியுங்கள். http://www.hichristians.com/2012/11/blog-post_4829.html
அங்கே பரிசுத்தாவியானவர் ஒரு நபர் என்பதற்கான விளக்கம் வேதாகம ஆதாரங்களோடு எழுதப்பட்டுள்ளது.

HI CHRISTIANS.COM சொன்னது…

மேலும் ஸ்தேவான் ஆவியானவரை பார்க்கவில்லை என்பதற்காக பரிசுத்தாவியானவர் என்று ஒருவர் இல்லை என்று ஆகிவிடாது என்பதைகருத்தில் கொள்க.

Venice சொன்னது…

Parisutha Aaviyaanavar ithula Aanavar entra vaarthai Tamil bible il serkapattathu... Moola mozhiyil apdi oru nabarai kurikum vaarthai aaga payanpaduthapadavillai... Holy Spirit means parisutha aaavi.. Aaviyanavar illaii... Tamil Bible la mattume vaasichinganna sathyam purinchuka mudiyath.. English la neraya mozhipeyarpugal iruku... Athayum vaasicha thaan sathyam theriyum... Naan yesuvaal nirapa paten or yehovah vaaal nirapa patten nu bible engayachum vaasichirukeengala.. Apdi oru vasanam kidayath... Karanam avargal nabar gal.. Person.. But holy spirit oru nabar illla.. Ath naala than parisuta aaaviyal nirapa pattargal nu iruku.. Yesu puraa vadivulayo nerupu vadivulayo vanthatha bible ah iruka... No.. Bcz he s a person... Yesuvea parisutha aaviyin oru paagam na.. Ethuku yesu mela parisutha aaavi iranganum...thiruthuvathin padi avare oru parisutha aaavi thaane.. Trinity Christian oda main doctrine na.. En antha vaarthaiye bible la illla... Paraloham iruku namburom.. Bcz antha vaarthai yavath bible la iruku... Ath mathiri thaan uyirthezguthal.. Theva thoothargal..paavam...Jesus in maranam.. Ratchipu... Meetpu.. Ithellam Jw sum namburaanga bcz antha vaarthai yavath bible la iruku... Trinity entra vaarthai bible la irunthuchuna atha kandipa Jws um nambuvaanga.. Paarambariya nambikaikalai oram kattivittu.. Puthithagaa bible la padikra maari padicha sathyam puriyum..

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்